Wednesday, November 13, 2013

குழந்தை...

குழந்தை...

நண்பர்கள் மூவர் சேர்ந்து ஒரு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இந்த உலகிற்கு புதியதாய் ஓர் மனித உயிர்.
அந்த உயிரை சார்ந்தவர்கள் மகிழும் மகிழ்ச்சியில் பங்குகொள்ள இந்த மூவரும் செல்கின்றனர்.
கையில் குழந்தைக்கு தேவையான பஞ்சு மெத்தை-யை வாங்கிச் செல்கின்றனர்.
குழந்தையும், தாயும் இருக்கும் அறைக்குள் - குழந்தையை பார்த்து மகிழ்கின்றார்கள்.

அந்த மகிழ்ச்சியில் மூவரில் இருவர் பேசிக்கொள்கின்றனர்...
நபர் 1: குழந்தை அவங்க அப்பாவை மாதிரியே இருக்கு பார்த்தியா?
நபர் 2: ஆமான்டா...!

(இங்கே நபர் 3, எதுவும் பேசவில்லை... சப்தமில்லாமல் நினைக்கிறார்...)
(நபர் 3: அவங்க அப்பா மாதிரி இல்லாமா? பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியா இருக்கும்...)

நபர் 2: டேய் அந்த மூக்கை பார்த்தியா... அவங்க அப்பா மாதிரி அப்படியே! ஜெராக்ஸ் காப்பி...!
நபர் 1: அது அவங்க பேமிலி சிம்பல்றா...!
(நபர் 3: டேய் இதெல்லாம், உங்களுக்கு ஓவரா தெரியலையா...! மகிழ்ச்சியில் என்ன பேசுகிறோம்னு தெரியாம பேசிட்டிருக்கீங்கடா...)

சிறிது நேரம், அங்கிருந்தவர்களிடம் பேசி வெளியில் வருகின்றனர்...
நபர் 3, இப்பொழுதும் மனதிற்குள் சில எண்ணங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

(மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?
ஆஸ்பித்திரிக்கு குழந்தைய பார்க்க வந்தா, குழந்தை ஆரோக்கியமா இருக்கா? ஏதாவது பிரச்சினை இருக்கா என்று கேட்கறதவிட்டு
டேய் மூக்க பார்த்தியா, வாய பார்த்தியா - அவங்க அப்பாவ மாதிரியே இருக்கு, அவங்க அம்மாவ மாதிரியே இருக்கு னு அர்த்தமில்லாமா
பேசுறானுங்க? இதில் என்ன ஆச்சர்யம். பெற்றோரின் சாயிலிலோ, தாத்தா பாட்டி சாயலிலோ - குழந்தை பிறப்பது இயற்கைதானே?
பக்கத்துவீட்டுக்காரன் சாயலில் பிறந்தால்தான் ஆச்சர்யப்படலாம்!? லூசு பசங்க...

இல்ல, இப்படி சொல்றதுல ஏதாவது விஷேச காரணங்கள் இருக்குமோ? இப்படியெல்லாம் சொன்னால்தான் அந்த குழந்தையை பெற்றெடுத்த
தாய்க்கு சந்தோஷமோ? அவளுக்கு தெரியாதா குழந்தை யார் மாதிரி பிறக்கும் என்று? இவர்கள் போய்தான் ஆனித்தரமாக அப்படி சொல்ல
வேண்டுமோ? என்ன கொடுமா சார் இது...!

இப்படி பேசறதால, ஏதோ உள்குத்து இருக்கறமாதிரி எனக்கு தோனுது? இல்ல, இப்படியே பேசி பழக்கப்பட்டுடானுங்களோ?
குழந்தை பிறந்திருக்குன்னு பார்க்கப்போனா, முதல்ல, குழந்தை யார் மாதிரி இருக்குன்னு ஆராய்ச்சி பன்றதையே பொழப்பா
வெச்சிட்டிருக்கானுங்க... யார் மாதிரி இருந்தா என்ன? ஓர் புதிய ஜீவன் இந்த உலகிற்கு வந்திருக்கு. அதை வரவேற்று
தூய எண்ணத்துடன் அந்த உயிரை வாழ்த்தலாம். அந்த குழந்தை நன்றாக வளர்ந்து பெரிய பெரிய நல் விஷயங்களை செய்யவேண்டும்
என்று நினைக்கலாம். அதைவிட்டு, யார் மாதிரி இருக்கு என்றே ஆராய்ச்சி செய்யறோம். இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று
எனக்கு தெரியவில்லை.

இதை பற்றியெல்லாம் அந்த ரெண்டு பேர்கிட்டயும் பேசினா, உடனே தர்க்கம் பன்றேன், ஏன்டா இப்படி யோசிக்கிறாய்
என்று என்மேலேயே தப்பு, சரி - ன்னு ஆரம்பிச்சுடுவானுங்க... நட்பில் விரிசல் விழுந்துவிடும். வேண்டாப்பா சாமி...!
மனசுல நினைச்சதோட நிறுத்திக்க...)

-எழுதியது
ஆ.வி.குமார்.

3 comments:

Anonymous said...

வணக்கம்

உரையாடல் நகைச்சுவைப்பாணியில் அமைந்துள்ளது... இன்றைய நாளுக்கு ஒரு சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

குழந்தைகள் தினச் சிறப்புப் பதிவு
கொஞ்சம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும்.....
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ஆவி.குமார் said...

திரு.ரூபன்(2008) மற்றும் திரு.ரமணி இருவரின் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள்...