
1. ஒன்று வாங்கினால்... இரண்டு இலவசம்.
2. 20% Extra... 50% Extra.
3. சோப் வாங்கினால் வீடு இலவசம்.
4. வார இதழ் வாங்கினால் மொபைல் இலவசம்.
அதெப்படி ஒரு பொருளுக்கான விலையை கொடுத்தால்,
அதே வகையில் இன்னும் இரண்டு பொருள்களை இலவசமாக கொடுப்பார்கள்.
விற்பவர்களுக்கு அறிவில்லையா என்ன?
கொஞ்சம் யோசித்தோமானால் மூன்று பொருள்களுக்கும் சேர்த்தேதான்
நாம் பணம் கொடுத்து வாங்குகிறோம். இதில் வாங்குபவருக்குதான் அறிவு
அந்த நேரத்தில் வேலை செய்வதில்லை.
சரியான விலை கொடுத்து வாங்கினாலே பொருள்கள் தரமானதாக இல்லாத
இந்த காலகட்டத்தில், இலவசமாக கொடுக்கப்படும் பொருள்களின் தரம்
எப்படி இருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வியாபார உக்தியின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பொதுமக்களின்
நிலையை நினைத்து எனக்கு சமுதாய கோபம் வெளிப்படுகிறது.
நம் மக்கள் இலவசம் என்றால் வாயை பிளந்து கொண்டு வரிசையில் நின்று
அடித்து, பிடித்து அதை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை பார்க்கும் போதும்
கோபம் ஏற்படுகிறது.
மக்கள் தன் சொந்த உழைப்பில் ஒரு பொருளை வாங்கி சந்தொஷம் அடைவதைவிட... இலவசமாக கிடைக்கும் பொருள்களில் கிடைக்கும் சந்தோஷத்தையே பெரிதென கருதி அற்ப ஆனந்தம் அடைகின்றனர்.
உழைக்காமல் வந்த பலன் வெகு நாட்கள் இன்பமளிக்காது என்பது தெரிந்திருந்தும் கிடைத்தவரை லாபம் என்னும் சில நாள் சந்தோஷத்திற்கே அலைகின்றனர்.
ஏன் மக்கள் மனது இப்படி மாறியது, அலைகிறது?
எல்லாம் வியாபாரத்தின் சதி.
மக்களை உழைக்க விடாமல், எதை எடுத்தாலும் இலவசம் இலவசம் என்று
விளம்பரம் செய்து மக்களை சோம்பேறிகளாக்கி வைத்துள்ளனர்.
பேச்சு வழக்கில் ஒன்று சொல்வார்கள் சிலர்.
"ஓசியிலே கிடைத்தால் ஃபினாயில கூட வாங்கி குடிப்பார்கள்" என்று.
இந்த நிலைமை வெகு சீக்கரத்தில் வரக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இலவசத்திற்கு அலையும் மக்கள் ஏன் யோசிப்பதில்லை.
100 பேரில் 10 பேருக்கு மட்டும் கண் துடைப்பாக ஒரு சில இலவச பொருட்களை
கொடுத்துவிட்டு எஞ்சியுள்ள 90 பேரிடமிருந்தும் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் வியாபாரிகள் என்று. அதாவது 90 நபர்களை முட்டாள்களாக்கி, 10 நபர்களை சோம்பேறிகளாக்கும் முயற்சிதான் இது என்பது என் கருத்து.
வியாபாரிகள் ஏன் இலவசமாக ஒரு பொருளை கொடுக்க வேண்டும்!?
இலவசம் என்ற பெயரில் சூட்சமமாக லாபம் பார்க்கிறார்கள்.
இவர்கள் லாபம் பார்ப்பது நேர்மையான வழியிலா?
குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்கிறார்கள்.
வியாபாரத்தில் லாபம் பார்க்க மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று சட்டம் ஏதேனும் இருக்கிறாதா?
இவர்கள் செய்யும் இந்த வியாபார தந்திரம் நியாமானதா? சரியானதா? தவறானாதா? - எனக்கு புரியவில்லை.
இதை படிக்கும் லாப நோக்கு வியாபாரிகள் தக்களுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறை இருக்குமானால்,
நேரம் கிடைத்தால் பின்னூட்டங்களின் மூலம் விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எடுத்துக்காட்டாக 200 ரூபாய் என விற்கப்பட்ட பொருள் 400 ரூபாயாக மாற்றப்படுகிறது. ஆனால், "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற போர்வையில் இரண்டு பொருள்கள் விற்கப்படுகிறது.
ரூ.400 என விற்கப்படும் இரண்டு பொருள்களின் தரமும் ரூ.100க்கு கூட பொருமானமுள்ளதாக, தரமானதாக இருப்பதில்லை.
வாங்கிவந்த ஓரிரண்டு நாட்களில் அந்த பொருள் தன் வேலையை காண்பித்து விடுகிறது. ஆக இரண்டுக்கு பதிலாக ஒரு பொருளையே தரமானதாக, சரியான விலையில் ஏன் விற்கக்கூடாது?
மார்க்கெட்டில் விலை போகாத பொருட்களை இலவசம் என்ற பெயரில் அதிக லாபத்தில் விற்றால் நாம் அந்த தந்திரத்தை அறியாமல் கூட்டத்தில் அடித்து பிடித்து அந்த வீணாக போன பொருளை வாங்கி பின் ஏமாறுகிறோம்.
இதில், யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைத்ததென பெருமிதம் வேறு.
தமிழ்படங்களில் வரும் வசனங்கள் போல "என்ன கொடும சார் இது?".
(இந்த இடுகை, தனி மனித கருத்து தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை படிக்கும் ஒரு சிலராவது இனிமேல் இலவசத்தின் மேல் அக்கறை காட்டாமல் இருப்பார்கள் எனில்,
நான் உண்மையான ஆனந்தம் கொள்வேன். அனைவருக்கும் நன்றி.)
எழுதியது
- ஆ.வி.குமார்.
No comments:
Post a Comment