Sunday, December 5, 2010

பக்கு...பக்கு...





"புண்பட்டு நின்றதடா என் நண்பனின் மனம்...
ஐயகோ...
கண்டுக்காமல் போவது இந்த பெண்ணின் குணம்..."

இந்த வரிகளை எனது நண்பர்களில் ஒருவர் மிக அழகாக, கேலியாக, ரசிக்கும்படியாக அடிக்கடி சொல்வார். அவர் சொல்வதை

கேட்பவர் யாராக இருந்தாலும், தன் நிலை மறந்து, உடன் வாய்விட்டு சிரிப்பார்கள். ஒரு நிமிடமேனும், சந்தோஷம் அடைவார்கள்.

ஆனால், இந்தக்கால திரைப்பட இயக்குநர்களில் சிலர், 3மணி நேரம் நம்மை அழ வைக்கிறார்கள். சமிபத்தில "வெற்றி"கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்திற்கு சென்று, பொழுதை போக்கினோம். எனக்கு தெரிந்தவரை, பொழுதுபோக்கு என்பது ஓரளவுக்கு ரசனையுடன் இருக்க வேண்டும். ஆனால், இந்தப்படம் ரசிக்கும்படியாக இல்லை என்பதே எங்களின் வருத்தம். படம் பார்த்து
வெளியே வரும்பொழுது, எங்களுக்குள் ஒருசில உரையாடல்கள்...

அதை blog-ல் எழுதினால் என்ன என்று தோன்றியது. உடன் செயல்படுத்திவிட்டேன். நாங்கள் மூவர் சென்று இந்தப்டம் பார்த்தோம். நான் நபர் 3 என்று வைத்துக்கொண்டு, மேற்கொண்டு படியுங்கள...

நபர் 1: படம் ஆரம்பிக்கும் போது கொடுத்த introவுக்கும், முடிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை...
நபர் 2: அதையெல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் என்ன படம் திரையில் காட்டுகிறார்களோ, அதை பார்க்கவேண்டியது நம் கடமை. குறுக்கு கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.
நபர் 1: அதுவும் சரிதான். நாம் இதைப்பற்றி விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை...
(இங்கே சற்று நேரம் இடைவெளி...)
நபர் 1: அதெப்படி கேட்கக்கூடாது என்று சொல்லலாம். நான் கேட்பேன். ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால், முடிக்கும்போது என்னவோ குறை இருக்கிறது. ஏன் இப்படி படம் எடுக்கிறார்கள்?
நபர் 2: அதெல்லாம் இப்படித்தான் எடுப்பார்கள், நாம என்ன பன்றது...?
நபர் 1: இதுல, fm-ல வேற ஆர்யா, ஸ்ரேயா, சந்தானம் மூவரும் சேர்ந்து நடித்திருக்கும் ஒரு ஜாலியான படம் - னு விளம்பரம் வேற... இந்த முனு பேர்ல யார் உண்மையா நடிச்சிருக்காங்க...? மத்தவங்களாவது ஏதோ நடிச்சிருக்காங்கன்னு சொல்லலாம்... சே. என்ன கொடும சார் இதெல்லாம்...!?
நபர் 2: விளம்பரம்னா அதான்...
நபர் 1: இதுல சந்தானம் எப்படியா, டைரில - பிளாஷ்பேக் கதையில வறாரு...!? அதாவது கதைப்படி பார்க்கும்போது, மகன் ஆர்யா... அப்பாவோட டைரிய படிக்கிறார். அதுல அவங்க அப்பவோட காதல் அவருக்கு தெரியுது...! இந்த டைரி கதையில, சந்தானம் எப்படி வந்தார். அப்பா ஆர்யா, training எடுத்துக்கற காலத்துல கூடவே சந்தானமும் training எடுத்துக்கற இன்னொரு நபர். ஒரு frame-ல யாவது அப்பா ஆர்யாவையும், சந்தானத்தையும் ஒன்றாகவோ, இல்ல அப்பா ஆர்யாவோட தோழனாகவோ காட்டவும் இல்லை... சொல்லப்படவும் இல்லை. பின் எப்படி, அப்பா ஆர்யாவோட டைரியில சந்தானம் என்ற கதாபாத்திரம் வந்தது...!?
நபர் 2: இந்த கேள்விய நீங்க கதை ரெடி பன்னவன்டாதான் போய் கேட்கனும். என்கிட்ட கேட்டா, எனக்கென்ன தெரியும்.
நபர் 1: சரி, உன்கிட்ட இன்னொரு கேள்வி கேட்கிறேன். கண்ணாடி போட்டவனெல்லாம் முட்டாளா...!? அதென்ன எல்லாப்படத்துலயும், ஒரு சோடபுட்டி கண்ணாடி போட்டவன கொஞ்சம் குறைவான ஆளாவே காட்டுறானுங்க...!? இதென்ன எழுதப்படாத சட்டம்?
நபர் 2: இதுக்கு நான் என்ன சொல்லமுடியும். அவங்க எடுக்கறதுதாங்க படம். இப்ப பன்ற படமெல்லாம் அப்படித்தானே எடுக்கிறாங்க...
நபர் 1: எல்லாப்படம்னு சொல்லக்கூடாது... ஏன் நீ, நாடோடிகள் படம் பார்க்கலையா... பசங்க படம் பார்க்கலையா... இந்த டைரக்டர்சும்தான் படம் பன்றாங்க. இவங்களெல்லாம் ரசிக்கும்படியும், நமக்கு பொழுது போகும்படியும் படம் பன்றாங்கள்ல... இவங்களும், இந்தக்கால டைரக்டர்ஸ்தானே.
நபர் 2: இதுல, பெரிய காமெடி என்னன்னா..., இந்த படத்த ஆரம்பிக்கும் போது, டைரக்டர் ஜீவா புகைப்படத்த காண்பிச்சு அவர் பேர வேற கெடுத்துடானுங்க.
நபர் 1: அப்புறம், ஸ்ரேயா... என்ன நடிச்சிருக்கு...!
நபர் 2: அவள விடுங்க, ஆர்யாவுக்கு இதுல என்ன நடிப்பிருக்கு... சும்மா வரதும், பேசறதும்... போறதும்னு. என்னதான்ய நடக்குது இங்க...? இதே போலத்தான் பாஸ்கரன்-லயும். ஒன்னுக்குமே உதவாத கேரக்டர். சந்தானத்திற்காக படம் ஓடியது.
நபர் 1: இதுல, ஆர்யா - எங்கேயோ போய், தமிழ்நாட்டு சினிமாவைப்பற்றியும், தமிழ் ரசிகர்களைப்பற்றியும் - ஏதோ சொல்லி வம்புல மாட்டிக்கி்ட்டானாம். அது என்னன்னு விபராமா தெரியல...
நபர் 2: அப்படியா... இது வேறயா...!?
நபர் 1: சரி, இந்த படத்தக்கூட சகிச்சுக்கலாம்... 200 கோடி, 300 கோடின்னு செலவு பண்ணி படம் எடுத்தாமட்டும்... படம் நல்லாயிருக்கா என்ன. அதுவும், இதைப்போலத்தான் இருக்கு. கேட்டா, நாங்க அங்க போனோம், இங்கே போனோம், அப்படி படம் எடுத்தோம், இப்படி படம் எடுத்தோம்னு எந்த சேனல் பார்த்தாலும் இவனுங்க பன்னின அலம்பல் தாங்க முடியல.
நபர் 2: புரியுது... புரியுது... ஷங்கர் படத்தைத்தானே சொல்றீங்க...
நபர் 1: ஆமாம். இவரு தந்திரன், எந்திரன் - அப்படி இப்படின்னு, எல்லா ஹாலிவுட் படத்துல இருந்தும் பிட் அடிச்சு அதுல கொஞ்சம் தமிழுக்கு தகுந்த மாதிரி - பிரசவம் பார்க்கின்ற சென்டிமென்ட்ட உள்ள போட்டு... ஒரு மாதிரியா பணம்
பார்த்துட்டானுங்க. இதே டைரக்டர்தான் சிவாஜினு ஒரு படம் பன்னினார். கருப்பு பணத்தை வெள்ளையா மாத்தினார். நல்லாயிருந்தது... ஆனால், இவரே இப்படி இத்தனை கோடிகளை வீணடிப்பார்னு எதிர்ப்பார்க்கலை... நாலு பேருக்கு நல்லா
சொறாவது போட்டிருக்கலாம்.
நபர் 2: அதையெல்லாம் விடுங்க... நம்ம விஜய் படம் ரிலீசாகட்டும். அப்புறம் பாருங்க...
நபர் 1: யோவ்... கொடும கொடும னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடும டேன்ஸ் ஆடிட்டிருக்கும்.
நபர் 2: இந்த படங்களை எல்லாம் பார்க்கும் போது... விஜய் படம் மட்டும் பார்க்க மாட்டீங்களா...?
நபர் 1: இந்த படங்களை - இந்த படங்களோட விளம்பரங்கள பார்த்து, கேட்டு - சரி படம் பார்ப்போம்னு தோணும். வருவோம். ஆனால், இளையதளபதி - படத்தோட விளம்பரங்கள் பார்த்தாலே... சும்மா. பத்திகிட்டு எரியும்ல... அப்புறம் எங்கிருந்து
தியேட்டருக்கு வற்ரது...!?
நபர் 2: அப்படின்னா, நீங்க வேற ஒருத்தரோட ரசிகர். அப்படித்தானே...?
நபர் 1: அப்படியெல்லாம் இல்ல. ஏன், இதே விஜய் நடித்த போக்கிரி படம் பார்த்தேன். நல்லாயிருந்தது. யார், நடிச்சாலும் படம் நமக்கு பொழுது போக்கா இருந்ததா... நம்மை மறந்து படத்தினுள் மூழ்கினோமா...! அதுதான். முக்கியம். அதவிட்டு, ஏன்டா... இந்தப்படத்துக்கு வந்தோம்னு நினைச்சா, அதில் என்ன உபயோகம் இருக்கு...?
நபர் 2: மொத்ததுல என்னதான் சொல்ல வறீங்க...!?
நபர் 1: மொத்தத்துல நான் சொல்றது என்னன்னா...? படம் படமா இருக்கனும்னு சொல்றேன். படம் எடுக்கத் தெரியதவனெல்லாம் படம் பன்னக்கூடாதுன்னு சொல்றேன். புதிய டைரக்டருக்கு வாழ்வு கொடுக்குறோம்னு சொல்லிகிட்டு,
தாயாரிப்பாளர்கள் அவங்க வாழ்க்கைய தொலச்சிடக்கூடாதுன்னு சொல்றேன். காசு, கொடுத்து நேரத்த வீணாக்கற மக்களுக்கு நாம பணத்தையும், நேரத்தையும் வீணடிச்சிட்டோமோன்னு நினைக்க வைக்க கூடாதுன்னு சொல்றேன். நல்ல நல்ல கதைகளை படமா காட்டலாம்னு சொல்றேன். உங்காந்து ரூம் போட்டு டிஸ்கஷன் பன்னும்போது, சின்ன சின்ன விஷயங்கள்ல அதிக கவனம் செலுத்தலாம்னு சொல்றேன். ஹாலிவுட் படத்த பார்த்து காபி குடிக்காம... சாரி... காபி அடிக்காமா... சொந்தமா கதை உருவாக்க சொல்றேன். லாஜிக் ஓட்டைகள் இல்லாத படம் பன்ன சொல்றேன்... லிங்குசாமி மாதிரி ஒரே ஹை-வேயேயையே
மறுபடி மறுபடி காட்டாதீங்கன்னு சொல்றேன்...
நபர் 2: ஐயோ சாமி... போதும், போதும்... நிறுத்துங்க... ஆளவிடுங்க.
நபர் 1: அப்படியெல்லாம் நிறுத்த முடியாது...
நபர் 2: நான் கிளம்பறேன். நேரம் ஏற்கனவே நிறைய வீணாப்போச்சு...
நபர் 1: சரி.. சரி. போயிட்டு வாங்க... மீண்டும் இன்னொரு மொக்க சினிமாவில சந்திப்போம்.

-எழுதியது
ஆ.வி.குமார்.

Saturday, April 17, 2010

இலவசம் ! இலவசம் !! இலவசம் !!!



1. ஒன்று வாங்கினால்... இரண்டு இலவசம்.
2. 20% Extra... 50% Extra.
3. சோப் வாங்கினால் வீடு இலவசம்.
4. வார இதழ் வாங்கினால் மொபைல் இலவசம்.

அதெப்படி ஒரு பொருளுக்கான விலையை கொடுத்தால்,
அதே வகையில் இன்னும் இரண்டு பொருள்களை இலவசமாக கொடுப்பார்கள்.
விற்பவர்களுக்கு அறிவில்லையா என்ன?

கொஞ்சம் யோசித்தோமானால் மூன்று பொருள்களுக்கும் சேர்த்தேதான்
நாம் பணம் கொடுத்து வாங்குகிறோம். இதில் வாங்குபவருக்குதான் அறிவு
அந்த நேரத்தில் வேலை செய்வதில்லை.

சரியான விலை கொடுத்து வாங்கினாலே பொருள்கள் தரமானதாக இல்லாத
இந்த காலகட்டத்தில், இலவசமாக கொடுக்கப்படும் பொருள்களின் தரம்
எப்படி இருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வியாபார உக்தியின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பொதுமக்களின்
நிலையை நினைத்து எனக்கு சமுதாய கோபம் வெளிப்படுகிறது.
நம் மக்கள் இலவசம் என்றால் வாயை பிளந்து கொண்டு வரிசையில் நின்று
அடித்து, பிடித்து அதை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை பார்க்கும் போதும்
கோபம் ஏற்படுகிறது.

மக்கள் தன் சொந்த உழைப்பில் ஒரு பொருளை வாங்கி சந்தொஷம் அடைவதைவிட... இலவசமாக கிடைக்கும் பொருள்களில் கிடைக்கும் சந்தோஷத்தையே பெரிதென கருதி அற்ப ஆனந்தம் அடைகின்றனர்.

உழைக்காமல் வந்த பலன் வெகு நாட்கள் இன்பமளிக்காது என்பது தெரிந்திருந்தும் கிடைத்தவரை லாபம் என்னும் சில நாள் சந்தோஷத்திற்கே அலைகின்றனர்.

ஏன் மக்கள் மனது இப்படி மாறியது, அலைகிறது?
எல்லாம் வியாபாரத்தின் சதி.
மக்களை உழைக்க விடாமல், எதை எடுத்தாலும் இலவசம் இலவசம் என்று
விளம்பரம் செய்து மக்களை சோம்பேறிகளாக்கி வைத்துள்ளனர்.

பேச்சு வழக்கில் ஒன்று சொல்வார்கள் சிலர்.
"ஓசியிலே கிடைத்தால் ஃபினாயில கூட வாங்கி குடிப்பார்கள்" என்று.
இந்த நிலைமை வெகு சீக்கரத்தில் வரக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இலவசத்திற்கு அலையும் மக்கள் ஏன் யோசிப்பதில்லை.
100 பேரில் 10 பேருக்கு மட்டும் கண் துடைப்பாக ஒரு சில இலவச பொருட்களை
கொடுத்துவிட்டு எஞ்சியுள்ள 90 பேரிடமிருந்தும் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் வியாபாரிகள் என்று. அதாவது 90 நபர்களை முட்டாள்களாக்கி, 10 நபர்களை சோம்பேறிகளாக்கும் முயற்சிதான் இது என்பது என் கருத்து.

வியாபாரிகள் ஏன் இலவசமாக ஒரு பொருளை கொடுக்க வேண்டும்!?
இலவசம் என்ற பெயரில் சூட்சமமாக லாபம் பார்க்கிறார்கள்.
இவர்கள் லாபம் பார்ப்பது நேர்மையான வழியிலா?
குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்கிறார்கள்.
வியாபாரத்தில் லாபம் பார்க்க மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று சட்டம் ஏதேனும் இருக்கிறாதா?
இவர்கள் செய்யும் இந்த வியாபார தந்திரம் நியாமானதா? சரியானதா? தவறானாதா? - எனக்கு புரியவில்லை.
இதை படிக்கும் லாப நோக்கு வியாபாரிகள் தக்களுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறை இருக்குமானால்,
நேரம் கிடைத்தால் பின்னூட்டங்களின் மூலம் விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எடுத்துக்காட்டாக 200 ரூபாய் என விற்கப்பட்ட பொருள் 400 ரூபாயாக மாற்றப்படுகிறது. ஆனால், "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற போர்வையில் இரண்டு பொருள்கள் விற்கப்படுகிறது.
ரூ.400 என விற்கப்படும் இரண்டு பொருள்களின் தரமும் ரூ.100க்கு கூட பொருமானமுள்ளதாக, தரமானதாக இருப்பதில்லை.
வாங்கிவந்த ஓரிரண்டு நாட்களில் அந்த பொருள் தன் வேலையை காண்பித்து விடுகிறது. ஆக இரண்டுக்கு பதிலாக ஒரு பொருளையே தரமானதாக, சரியான விலையில் ஏன் விற்கக்கூடாது?

மார்க்கெட்டில் விலை போகாத பொருட்களை இலவசம் என்ற பெயரில் அதிக லாபத்தில் விற்றால் நாம் அந்த தந்திரத்தை அறியாமல் கூட்டத்தில் அடித்து பிடித்து அந்த வீணாக போன பொருளை வாங்கி பின் ஏமாறுகிறோம்.
இதில், யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைத்ததென பெருமிதம் வேறு.
தமிழ்படங்களில் வரும் வசனங்கள் போல "என்ன கொடும சார் இது?".

(இந்த இடுகை, தனி மனித கருத்து தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை படிக்கும் ஒரு சிலராவது இனிமேல் இலவசத்தின் மேல் அக்கறை காட்டாமல் இருப்பார்கள் எனில்,
நான் உண்மையான ஆனந்தம் கொள்வேன். அனைவருக்கும் நன்றி.)

எழுதியது
- ஆ.வி.குமார்.