தனிமை...
ஒரு கொடிய நோய்.
ஒரு மனிதன் எத்தனையோ வகையான மன வலிகளிலிருந்து தப்பிக்க தனிமையை நாடுகிறான்.
தனிமை ஓர் தற்காலிகமான நிம்மதி, அவ்வளவுதான்.
தனிமை நிறைய நேரங்களில் நல்லதுபோலவே காட்சியளிக்கும்.
தனிமைதான் ஒரு மனிதனை உண்மையில் தான் யார் என்பதை புரியவைக்கும்.
தனிமைதான் எடுத்த காரியத்தை செவ்வணே செய்து முடிக்க பேருதவியாய் இருக்கும்.
தனிமைதான் மனதை ஒரு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.
தனிமைதான் அறிவை வளர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.
தனிமைதான் அறிவின் சிந்திக்கும் சக்தியை அதிகரிக்க செய்யும்.
எல்லாம் சரிதான்...
ஆனால்,
ஓர் உறவு கூட இல்லாத மனிதனின் நிலைமை என்னவாக இருக்கும்?
ஒரு நண்பன் கூட இல்லாத மனிதனின் நிலைமை என்னவாக இருக்கும்?
தனித்து விடப்பட்ட ஓர் உயிரின் நிலை, மனநிலை என்னவாக இருக்கும்?
எழுதியது,
ஆ.வி.குமார்.
