
"இந்த கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே! இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை!"
இந்த வரிகளை முதலில் காண்பித்துவிட்டு நடந்த, நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களையே வெள்ளித்திரையில் காண்பிக்கும் உக்தியைப்போல்,
பின்வரும் விமர்சனமும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் சம்மந்தமல்ல!
இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களிடம் இரண்டொரு கேள்வி?
சின்னத்திரையில் வியாபார நோக்கத்தில் எத்தனை எத்தனையோ உக்திகள் செயல்முறைபடுத்தப்படுகின்றன என்பதை மக்கள் அனைவரும் அறிவார்களா...?
எனக்கு தெரிந்தவரை லாட்டரி வியாபாரம் தமிழ்நாட்டில் செய்யக்கூடாது என்ற தடை சில வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே வியாபாரத்தை வேறு ஒரு முறையை கடைபிடித்து செய்யும் அறிவாளிகளின் ஏமாற்று வித்தையை மக்கள் அறிவார்களா...?
புத்தர் சொன்னது போல் ஆசையே அனைத்திற்கும் காரணம். ஆசையை ஒழி.
வாழ்க்கையில் தொடர் முயற்சி செய்து உழைத்து முன்னேறு... போன்ற நல்ல விஷயங்கள் நிறைய இருக்கும் போது, மக்களாகிய நாம் எந்தவிதமான முயற்சியையும் உழைப்பையும் கொடுக்காமல் இலவசம் என்ற பேரில் யார் எதை கொடுத்தாலும் அடித்து பிடித்து வாங்கி அதில் அற்ப சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
Free - இலவசம் - Free என்றால் உடனே முன்டியடித்துக்கொண்டு சென்று வாங்கவேண்டிய பொருளுடன் "இலவசமாக" என்று ஏமாற்றி கொடுக்கும் பொருளுக்கும் சேர்த்து பணத்தை நமக்கு தெரியாமலேயே மறைமுகமாக கொடுத்து அப்பொருட்களை வாங்குகிறோம் என்பது தான் உண்மை.
இதற்கும் நான் இங்கே விமர்சனம் செய்திருக்கும் விஷய்த்திற்கும் என்ன சம்மந்தம்? இருக்கின்றது என்பது என்னுடை எண்ணம். எல்லாம் வியாபர உக்திதான். இதைபோன்ற ஒரு வியாபார உக்தியைத்தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். சமீபகாலமாக, பெயர்பெற்ற ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு லாட்டரி ஷோவைப்பற்றியதுதான்.
இதைப்போல பல்ப்பல நிகழ்ச்சிகள் பலப்பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, இன்னமும் வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன? அவர்கள் என்னவிதமான வியாபாரம் செய்கிறார்கள்?
இதோ பதில்...
தொலைகாட்சி நிறுவனத்திற்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்திற்கும் ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. விஷேஷ sms எண்கள் ஒதுக்கப்படுகிறது. அந்த எண்களுக்கு மக்களாகிய நாம் sms அனுப்பினால் நமது பணம் ரூ.3 அதற்கு கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.
(இதுதான் வியாபாரம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.)
இதையே கொஞ்சம் ஆழமாக அனுகினால்... தமிழ்நாட்டில் சுமார் 6 கோடி மக்கள் தொகை.
இந்த 6 கோடி நபர்களில் குழந்தைகளையும் வயதான முதியவர்களையும் விட்டுவிட்டால் மீதம் 3 கோடி நபர்கள் வருகிறார்கள் என்று வைக்கலாம். இந்த 3 கோடி பேர்களில் அனைவரும் மொபைல் பயன்படுத்துவார்கள் என்று சொல்லமுடியாது. சுமாராக 1 கோடி பேர் மொபைல் சர்வீஸ் பயன்படுத்துபவர்கள் என்றும் வைக்கலாம். இந்த 1 கோடி நபர்களில் அத்தனை பேரும் ஆசைக்கு அடிமையானவர்கள் என்றும் சொல்லமுடியாது அல்லவா... அதனால் ஒரு பாதி நபர்களை எடுத்துக்கொள்வோம். 50 இலட்சம் பேர் இந்த மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தங்களுடைய மொபைல் சர்விஸிலிருந்து
ரூ.3 செலவு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சுமார் 50 இலட்சம் நபர்கள் ரூ.3 செலவு செய்தால், மொத்தத்தில் ரூ.150 இலட்சம் அந்த நிகழ்ச்சி நடத்தும் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் மொபைல் சர்வீஸ் நிறுவனத்திற்கும் அவர்களின் ஒப்பந்தப்படி சென்றடைகிறது.
இந்த மொத்த தொகையில் அதிகபட்ச தொகையாக ரூ.50,00,000 - நிகழ்ச்சியில் பங்குபெறும் நபருக்கு கொடுக்கப்படுமாம். எந்த ஒரு பங்கேற்பாளரும் அவ்வளவு எளிதில் இந்த 50 இலட்சத்தை பெறமாட்டார். அப்படி இருக்கையில், அப்படியே ஒரு பங்கேற்பாளர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று ரூ.50 இலட்சத்தை மகிழ்ச்சியாக
பெற்று செல்கிறார் என்றால் அது நமக்கும் சந்தோஷம்தான். ஆனால், அப்படி நடக்கிறாதா என்றால் இல்லை. பங்கேற்பாளர் கட்டாயம் ஏதோ ஒரு பகுதி பணத்தை அவருக்கென்று கட்டாயம் எடுத்து செல்வார். அதில் சந்தேகமில்லை.
அப்படி அவர் எடுத்துக்கொண்டு போகும் பணத்தைவிட்டு மீதம் அனைத்தும் மேற்சொன்ன இரு நிறுவனங்களுக்கும்தான்.
ஒரு மணிநேர ஒளிபரப்பில் இரண்டு நிறவனங்கள் சேர்ந்து 1.5 கோடி அளவில் தமிழ்நாட்டு மக்களிடம் மட்டும் சம்பாதித்தால், மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளிலிருக்கும் நபர்களிடமிருந்து எத்தனை எத்தனை கோடிகள்
சம்பாதிக்கிறார்கள்? இப்படி சம்பாதித்து எந்த ஒரு நல்ல காரியத்திற்கு செலவு செய்கிறார்கள்? கொண்டுபோய் வெளிநாட்டிலிருக்கும் வங்கிகளில் அவர்களுக்கும் அவர்களின் சுற்றதாருக்கும் பயன்படும்வகையில் சேமித்துக்கொள்கின்றனர்.
இது எப்படி தெரியுமா இருக்கின்றது... மக்களிடமிருந்து பணத்தை பறித்து கண்துடைப்பாக ஒரு பகுதி பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுத்து மீதத்தை சுருட்டிக்கொள்வது என்றுதான் பொருள்படுகிறது. இப்படி கிடைக்கும்
பணத்தை வைத்தே அவர்கள் அந்தந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி, இன்னும் இதுபோல் பலப்பல நிகழ்ச்சிகளை நடத்தி அவர்கள் பணம், பலம் படைத்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்க்ள. அதை "ஆ..." வென்று வாயை
பிளந்துகொண்டு நாம் வேடிக்கை பார்த்தும், அந்த நிகழ்ச்சிகளை பார்த்து பரவசமும் அடைகிறோம். நல்ல வேடிக்கையான நிகழ்ச்சி?
இதில் ஒரு விஷேஷமான விஷயம் என்னவென்றால்? அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில் நடு நடுவில் "பார்வையாளர்கள் கவனிக்கவும்! உங்களுக்கும் ஒரு பகுதி பணம் வழங்கப்படும். நீங்கள் உங்கள் மொபைலிலிருந்து
sms அனுப்பவும். அதுவும் உடனேவோ இல்லை நாளை மதியம் 12 மணிவரையோ அனுப்பிக்கொண்டே இருங்கள்."
- என்று சொல்வார். நாம அனுப்பலைனா அவர்களால இந்த நிகழ்ச்சிய நடத்த முடியாது இல்லையா...? அதனால எல்லோரும் கண்டிப்பா ரூ.3 செலவு செய்யுங்கள். கிடைத்தால் இலாபம். இல்லையென்றால் ரூ.3 தானே? போனால் போகட்டும்.
இந்த ரூ.3 ஐ வீதியில் சோற்றுக்கே வழியில்லாமல், முடியாமல் இருக்கும் ஒருவருக்கு டீ கூட வாங்கிக்கொடுக்க நாம் விரும்ப மாட்டோம். காரணம் ஆசை... உழைக்காமலே நம் கையில் ரூ.10000. நல்லது.
(மேற்சொன்ன விஷயத்தில் தவறான செய்தி இருந்தால் அதை தெரியப்படுத்த வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவை என் சிந்தனையில் தோன்றியவைதான். தவறை சுட்டிக்காட்டுவீர்கள் என்ற நல்ல
எண்ணத்தில்தான் blogspot-ல் எழுத நினைத்தேன்.)
நன்றி,
எழுதியது
-ஆ.வி.குமார்.
-ஆ.வி.குமார்.