அழகாக இருந்தும் "தான் ஒரு அழகி" என்ற அகம்பாவம் கொண்டவளாக இல்லாமல் இருந்தால்...எதற்குமே எரிந்து பொறிந்து தள்ளாதவளாக, "வாயாடியாக" இல்லாமல் இருந்தால்...
தங்கத்தின் மீதும் அணிகலன்கள் மீதும் "மோகம்" இல்லாமல் இருந்தால்...
கல்யாணத்திற்கு பிறகு வெளித்தோற்றத்திற்கு கணவன் மனைவியாகவும், வீட்டினுள் "எலியும் பூனையுமாக" இல்லாமல் இருந்தால்...
மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் சண்டையாகவும் மீத நாட்களில் மட்டும் "சந்தோஷமாக - பொய்யாக" வாழ்வது இல்லாமல் இருந்தால்...
எல்லாம் தெரிந்திருந்தும் "தற்பெருமை" பேசாமல் அளவுடன் பேசுபவளாக இருந்தால்...
எந்த சூழ்நிலையையும் "துணிவுடன்" எதிர்கொள்பவளாக இருந்தால்...
எப்பொழுதும் "சுறுசுறுப்புடனும் மன திடத்திடனும்" இருந்தால்...
கணவன் "குணத்தை அறிந்து" நடந்துகொள்பவளாக இருந்தால்...
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே இதில் "ஆவது" மட்டும் இருந்தால்...
சேலை வாங்க கடைக்கு சென்றால் உடன் எடுக்கும் "திறமை" கொண்டவளாக இருந்தால்...
சுடிதார் அணியும்போது ஷாலைகொண்டு கழுத்தை மறைக்காமல் இருந்தால்...
இருப்பதை கொண்டு, "புலம்பாமல்" குடும்பத்தை திறம்பட நடத்தி செல்பவளாக இருந்தால்...
தனக்கு "பொருந்தாத அழகு கலையில்" ஈடுபடதவளாக இருந்தால்...
"வேலைக்கு சென்றாலும்" வீட்டு வேலைகளையும் திறம்பட செய்பவளாக இருந்தால்...
ஆண் "சமைக்க வேண்டும்" என்ற எண்ணம் இல்லாதவளாக இருந்தால்...
தன் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் எப்பொழுதும் "சுத்தமாக" வைத்திருப்பவளாக இருந்தால்...
அடித்தாலும் புடித்தாலும் "நீதான் மச்சான்" என்று சுற்றிவருபவளாக இருந்தால்...
முடிவில் ஆணும் பெண்ணும் "சமம்" என்று சொல்லாமல், இருவருக்கும் வெவ்வேறு குணங்கள் உள்ளன என்பதை புரிந்தவளாக இருந்தால்...
இந்த கணினி-யுகத்தில் இது சாத்தியமா...?
இப்படி ஒரு மனைவிக்காக ஏங்கும் ஒரு இளைஞனுக்கு...
*இதை படிக்கும் கணவன்மார்கள், பெரியவர்கள் ஏதாவது அறிவுரைகள் சொல்ல நினைத்தால் உடனே தெரிவிக்கவும்.
*இதை படிக்கும் புதுமைப்பெண்கள், மனைவிமார்கள் ஏதாவது திட்டவேண்டும் என்று நினைத்தால் உடனே திட்டிதீர்த்துவிடுங்கள்.
- எழுதியது
ஆ.வி.குமார்
ஆ.வி.குமார்