Saturday, December 5, 2009

ரூ.3 ஐ இழந்தால் ரூ.10000 உங்களுக்கு?

ரூ.3 இழந்தால் ரூ.10000 உங்களுக்கு?




"இந்த கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே! இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை!"

இந்த வரிகளை முதலில் காண்பித்துவிட்டு நடந்த, நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களையே வெள்ளித்திரையில் காண்பிக்கும் உக்தியைப்போல்,
பின்வரும் விமர்சனமும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் சம்மந்தமல்ல!

இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களிடம் இரண்டொரு கேள்வி?
சின்னத்திரையில் வியாபார நோக்கத்தில் எத்தனை எத்தனையோ உக்திகள் செயல்முறைபடுத்தப்படுகின்றன என்பதை மக்கள் அனைவரும் அறிவார்களா...?

எனக்கு தெரிந்தவரை லாட்டரி வியாபாரம் தமிழ்நாட்டில் செய்யக்கூடாது என்ற தடை சில வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே வியாபாரத்தை வேறு ஒரு முறையை கடைபிடித்து செய்யும் அறிவாளிகளின் ஏமாற்று வித்தையை மக்கள் அறிவார்களா...?

புத்தர் சொன்னது போல் ஆசையே அனைத்திற்கும் காரணம். ஆசையை ஒழி.
வாழ்க்கையில் தொடர் முயற்சி செய்து உழைத்து முன்னேறு... போன்ற நல்ல விஷயங்கள் நிறைய இருக்கும் போது, மக்களாகிய நாம் எந்தவிதமான முயற்சியையும் உழைப்பையும் கொடுக்காமல் இலவசம் என்ற பேரில் யார் எதை கொடுத்தாலும் அடித்து பிடித்து வாங்கி அதில் அற்ப சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

Free - இலவசம் - Free என்றால் உடனே முன்டியடித்துக்கொண்டு சென்று வாங்கவேண்டிய பொருளுடன் "இலவசமாக" என்று ஏமாற்றி கொடுக்கும் பொருளுக்கும் சேர்த்து பணத்தை நமக்கு தெரியாமலேயே மறைமுகமாக கொடுத்து அப்பொருட்களை வாங்குகிறோம் என்பது தான் உண்மை.

இதற்கும் நான் இங்கே விமர்சனம் செய்திருக்கும் விஷய்த்திற்கும் என்ன சம்மந்தம்? இருக்கின்றது என்பது என்னுடை எண்ணம். எல்லாம் வியாபர உக்திதான். இதைபோன்ற ஒரு வியாபார உக்தியைத்தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். சமீபகாலமாக, பெயர்பெற்ற ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு லாட்டரி ஷோவைப்பற்றியதுதான்.
இதைப்போல பல்ப்பல நிகழ்ச்சிகள் பலப்பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, இன்னமும் வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன? அவர்கள் என்னவிதமான வியாபாரம் செய்கிறார்கள்?
இதோ பதில்...

தொலைகாட்சி நிறுவனத்திற்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்திற்கும் ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. விஷேஷ sms எண்கள் ஒதுக்கப்படுகிறது. அந்த எண்களுக்கு மக்களாகிய நாம் sms அனுப்பினால் நமது பணம் ரூ.3 அதற்கு கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.
(இதுதான் வியாபாரம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.)

இதையே கொஞ்சம் ஆழமாக அனுகினால்... தமிழ்நாட்டில் சுமார் 6 கோடி மக்கள் தொகை.
இந்த 6 கோடி நபர்களில் குழந்தைகளையும் வயதான முதியவர்களையும் விட்டுவிட்டால் மீதம் 3 கோடி நபர்கள் வருகிறார்கள் என்று வைக்கலாம். இந்த 3 கோடி பேர்களில் அனைவரும் மொபைல் பயன்படுத்துவார்கள் என்று சொல்லமுடியாது. சுமாராக 1 கோடி பேர் மொபைல் சர்வீஸ் பயன்படுத்துபவர்கள் என்றும் வைக்கலாம். இந்த 1 கோடி நபர்களில் அத்தனை பேரும் ஆசைக்கு அடிமையானவர்கள் என்றும் சொல்லமுடியாது அல்லவா... அதனால் ஒரு பாதி நபர்களை எடுத்துக்கொள்வோம். 50 இலட்சம் பேர் இந்த மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தங்களுடைய மொபைல் சர்விஸிலிருந்து
ரூ.3 செலவு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சுமார் 50 இலட்சம் நபர்கள் ரூ.3 செலவு செய்தால், மொத்தத்தில் ரூ.150 இலட்சம் அந்த நிகழ்ச்சி நடத்தும் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் மொபைல் சர்வீஸ் நிறுவனத்திற்கும் அவர்களின் ஒப்பந்தப்படி சென்றடைகிறது.

இந்த மொத்த தொகையில் அதிகபட்ச தொகையாக ரூ.50,00,000 - நிகழ்ச்சியில் பங்குபெறும் நபருக்கு கொடுக்கப்படுமாம். எந்த ஒரு பங்கேற்பாளரும் அவ்வளவு எளிதில் இந்த 50 இலட்சத்தை பெறமாட்டார். அப்படி இருக்கையில், அப்படியே ஒரு பங்கேற்பாளர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று ரூ.50 இலட்சத்தை மகிழ்ச்சியாக
பெற்று செல்கிறார் என்றால் அது நமக்கும் சந்தோஷம்தான். ஆனால், அப்படி நடக்கிறாதா என்றால் இல்லை. பங்கேற்பாளர் கட்டாயம் ஏதோ ஒரு பகுதி பணத்தை அவருக்கென்று கட்டாயம் எடுத்து செல்வார். அதில் சந்தேகமில்லை.
அப்படி அவர் எடுத்துக்கொண்டு போகும் பணத்தைவிட்டு மீதம் அனைத்தும் மேற்சொன்ன இரு நிறுவனங்களுக்கும்தான்.

ஒரு மணிநேர ஒளிபரப்பில் இரண்டு நிறவனங்கள் சேர்ந்து 1.5 கோடி அளவில் தமிழ்நாட்டு மக்களிடம் மட்டும் சம்பாதித்தால், மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளிலிருக்கும் நபர்களிடமிருந்து எத்தனை எத்தனை கோடிகள்
சம்பாதிக்கிறார்கள்? இப்படி சம்பாதித்து எந்த ஒரு நல்ல காரியத்திற்கு செலவு செய்கிறார்கள்? கொண்டுபோய் வெளிநாட்டிலிருக்கும் வங்கிகளில் அவர்களுக்கும் அவர்களின் சுற்றதாருக்கும் பயன்படும்வகையில் சேமித்துக்கொள்கின்றனர்.

இது எப்படி தெரியுமா இருக்கின்றது... மக்களிடமிருந்து பணத்தை பறித்து கண்துடைப்பாக ஒரு பகுதி பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுத்து மீதத்தை சுருட்டிக்கொள்வது என்றுதான் பொருள்படுகிறது. இப்படி கிடைக்கும்
பணத்தை வைத்தே அவர்கள் அந்தந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி, இன்னும் இதுபோல் பலப்பல நிகழ்ச்சிகளை நடத்தி அவர்கள் பணம், பலம் படைத்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்க்ள. அதை "..." வென்று வாயை
பிளந்துகொண்டு நாம் வேடிக்கை பார்த்தும், அந்த நிகழ்ச்சிகளை பார்த்து பரவசமும் அடைகிறோம். நல்ல வேடிக்கையான நிகழ்ச்சி?

இதில் ஒரு விஷேஷமான விஷயம் என்னவென்றால்? அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில் நடு நடுவில் "பார்வையாளர்கள் கவனிக்கவும்! உங்களுக்கும் ஒரு பகுதி பணம் வழங்கப்படும். நீங்கள் உங்கள் மொபைலிலிருந்து
sms அனுப்பவும். அதுவும் உடனேவோ இல்லை நாளை மதியம் 12 மணிவரையோ அனுப்பிக்கொண்டே இருங்கள்."
- என்று சொல்வார். நாம அனுப்பலைனா அவர்களால இந்த நிகழ்ச்சிய நடத்த முடியாது இல்லையா...? அதனால எல்லோரும் கண்டிப்பா ரூ.3 செலவு செய்யுங்கள். கிடைத்தால் இலாபம். இல்லையென்றால் ரூ.3 தானே? போனால் போகட்டும்.

இந்த ரூ.3 வீதியில் சோற்றுக்கே வழியில்லாமல், முடியாமல் இருக்கும் ஒருவருக்கு டீ கூட வாங்கிக்கொடுக்க நாம் விரும்ப மாட்டோம். காரணம் ஆசை... உழைக்காமலே நம் கையில் ரூ.10000. நல்லது.

(மேற்சொன்ன விஷயத்தில் தவறான செய்தி இருந்தால் அதை தெரியப்படுத்த வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவை என் சிந்தனையில் தோன்றியவைதான். தவறை சுட்டிக்காட்டுவீர்கள் என்ற நல்ல
எண்ணத்தில்தான் blogspot-ல் எழுத நினைத்தேன்.)

நன்றி,
எழுதியது
-.வி.குமார்.

Friday, October 30, 2009

மனைவி...?

அழகாக இருந்தும் "தான் ஒரு அழகி" என்ற அகம்பாவம் கொண்டவளாக இல்லாமல் இருந்தால்...

எதற்குமே எரிந்து பொறிந்து தள்ளாதவளாக, "வாயாடியாக" இல்லாமல் இருந்தால்...

தங்கத்தின் மீதும் அணிகலன்கள் மீதும் "மோகம்" இல்லாமல் இருந்தால்...

கல்யாணத்திற்கு பிறகு வெளித்தோற்றத்திற்கு கணவன் மனைவியாகவும், வீட்டினுள் "எலியும் பூனையுமாக" இல்லாமல் இருந்தால்...

மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் சண்டையாகவும் மீத நாட்களில் மட்டும் "சந்தோஷமாக - பொய்யாக" வாழ்வது இல்லாமல் இருந்தால்...

எல்லாம் தெரிந்திருந்தும் "தற்பெருமை" பேசாமல் அளவுடன் பேசுபவளாக இருந்தால்...

எந்த சூழ்நிலையையும் "துணிவுடன்" எதிர்கொள்பவளாக இருந்தால்...

எப்பொழுதும் "சுறுசுறுப்புடனும் மன திடத்திடனும்" இருந்தால்...

கணவன் "குணத்தை அறிந்து" நடந்துகொள்பவளாக இருந்தால்...

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே இதில் "ஆவது" மட்டும் இருந்தால்...

சேலை வாங்க கடைக்கு சென்றால் உடன் எடுக்கும் "திறமை" கொண்டவளாக இருந்தால்...

சுடிதார் அணியும்போது ஷாலைகொண்டு கழுத்தை மறைக்காமல் இருந்தால்...

இருப்பதை கொண்டு, "புலம்பாமல்" குடும்பத்தை திறம்பட நடத்தி செல்பவளாக இருந்தால்...

தனக்கு "பொருந்தாத அழகு கலையில்" ஈடுபடதவளாக இருந்தால்...

"வேலைக்கு சென்றாலும்" வீட்டு வேலைகளையும் திறம்பட செய்பவளாக இருந்தால்...

ஆண் "சமைக்க வேண்டும்" என்ற எண்ணம் இல்லாதவளாக இருந்தால்...

தன் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் எப்பொழுதும் "சுத்தமாக" வைத்திருப்பவளாக இருந்தால்...

அடித்தாலும் புடித்தாலும் "நீதான் மச்சான்" என்று சுற்றிவருபவளாக இருந்தால்...

முடிவில் ஆணும் பெண்ணும் "சமம்" என்று சொல்லாமல், இருவருக்கும் வெவ்வேறு குணங்கள் உள்ளன என்பதை புரிந்தவளாக இருந்தால்...

இந்த கணினி-யுகத்தில் இது சாத்தியமா...?

இப்படி ஒரு மனைவிக்காக ஏங்கும் ஒரு இளைஞனுக்கு...

*இதை படிக்கும் கணவன்மார்கள், பெரியவர்கள் ஏதாவது அறிவுரைகள் சொல்ல நினைத்தால் உடனே தெரிவிக்கவும்.

*இதை படிக்கும் புதுமைப்பெண்கள், மனைவிமார்கள் ஏதாவது திட்டவேண்டும் என்று நினைத்தால் உடனே திட்டிதீர்த்துவிடுங்கள்.

- எழுதியது
ஆ.வி.குமார்

Monday, May 25, 2009

கடவுள் ???

இப்படி ஒருவன் இருப்பானெனில் அவனுடைய அலுவல்... படைத்தல், காத்தல், அழித்தல். ஆனால் படைப்பதும் அழிப்பதும் மட்டுமே தொழிலாக கொண்டுள்ளான்.
தக்க நேரத்தில் காக்க மறந்து விடுகிறான் அவன். இப்படி ஒருவன் உண்மையில் இல்லை.

இவ்வுலகையும் வான்வெளியையும் அடக்கி ஆள்கின்ற ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்கிறோம். அந்த கடவுளுக்கு உருவம் கொடுத்து கடவுள் இப்படித்தான் இருப்பார். அவருக்கு இது இது வேலைகள் என்று மனிதனாகப்பிறந்தவன் மனித உருவாகவே கடவுள் என்னும் சக்தியை உணர்கிறான். அப்படி இருக்கையில் மனிதன்தான் கடவுள் எனப்படுபவன் என்பது என் கருத்து.

ஒரு மனித சக்தியை எடுத்துக்காட்டுக்காக எடுத்துக்கொண்டால், ஓர் உயிரையோ அல்லது ஒரு ஜடப்பொருளையோ உருவாக்கும் சக்தி அவனுள் இருக்கிறது. அப்படி உருவாக்கிய இரண்டு பொருள்களையுமே காக்கும் சக்தியும் அவனிடம் இருக்கிறது. அவ்விரு பொருள்களையும் அழிக்கும் சக்தியும் அவனிடம் இருக்கிறது. ஆக கடவுள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதானகப்பட்டவன் செய்கிறான். ஆக மனிதன் தான் கடவுள்.

ஆனால், மனிதனையும் அடக்கி ஆள்கின்ற சக்தி ஒன்று இருக்கின்றது. அதுதான் இயற்கை.
இயற்கையை எந்த ஒரு மனிதன் நினைத்தாலும் வெல்ல முடியாது. அடுத்த கனம் என்னவென்று மனிதன் அறியமுடியாது. ஆனால் இயற்கை அறியும். ஆக ஐம்பூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் - இவை ஐந்தும் தான் கடவுள். இவைகளை வணங்கி வழிபடுவதே சாலச்சிறந்நது...

இன்னொரு வகையில் இந்த உலகையும் மற்ற பிற கோள்களையும் அடக்கி தன் வசம் வைத்துள்ள சூரியனையும் நாம் கடவுளாக வணங்கலாம். சூரியனின் சக்தி கொண்டே பூமியில் அனைத்தும் நிறைவேறுகிறது. ஆழ்ந்து சிந்தித்தால் தானாக புலப்படும்...

இவைகளை விடுத்து சிற்பி செதுக்கிய கல்லை கடவுளாகவும், அதற்கு அந்த அபிஷேகம் இந்த அபிஷேகம் என்ற வீன் சடங்குகளாலும் மனிதன் அலைகழிக்கப்படுவது முட்டாள்தனம். இந்த கல்லை பார்பதற்கு நாம் நிறைய பணம் செலவு செய்யவேண்டும். அதிலும் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வோரு தெய்வ சிலைகள். அந்தத் துறைகளை அந்த கடவுள்தான் நிவர்த்தி செய்வார். அவரிடம் சென்று வரிசையில் காத்திருந்து அவனருகில் சென்றவுடன் பயபக்தியுடன் தலைதாழ்த்தி வேண்டினாலொழிய அவர் அவருடைய பிள்ளையாகிய மனிதர்களுக்கு உதவுவார். என்ன வேடிக்கை...?

அப்படி வேண்டிவிரும்பி பெறுவதற்கு அவருக்கு நாம் என்ன அடிமைகளா?
அப்படி நாம் அடிமைகள் என்றால் கடவுள் என்ன கெட்டவரா?
வேண்டுமென்றே நம்மை இவ்வுலகில் படைத்து, நமக்கு பலவழிகளில் துன்பத்தை கொடுத்து அதை வேடிக்கை பார்ப்பதுதான் அவர் வேலையா?

ஆக, மனிதன் இன்பப்படுவதற்கும் துன்பப்படுவதற்கும் மனிதனே காரணம்.
எல்லாம் அவன் செயல் அல்ல! எல்லாம் இவன் (மனிதன்) செயல்!

கடவுளையே உருவாக்கியவ்ன மனிதன். நம் முன்னோர்கள் மனித ஜென்மங்களை ஒரு கட்டுக்குள் வைக்க ஒரு மாயையை உருவாக்கினார்கள். அஃக்தாவது, நல்ல சக்தி, கெட்ட சக்தி... என்று. நல்ல சக்தியாக கற்சிலைகளையும், கெட்ட சக்தியாக நம் கண்களுக்கு தெரியாத இரவில் மட்டுமே உலகத்தை ஆட்கொள்ளும் கடவுளின் எதிரியான ஆவிகளையும் பிசாசுகளையும் படைத்தனர். இவற்றை வருங்கால சந்ததியினர் நம்புவதற்காக பல கதைகளை உண்மையாக நடந்ததாகவும் அதை அவர்கள் நேரில் பார்த்து அனுபவித்ததாகவும் சொல்லி நம்மை அவைகளுக்கு பய்ப்படும்படியும், அடிமைகளாகவும் செய்துவிட்டனர்.

நிகழ்கால மனிதர்களுள் இன்னும் பல பேர் நாம் எதற்காக இந்த சடங்குகளை செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே எல்லாம் பெரியவர்கள் சொன்னது, அதை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு நமக்கு மட்டும் கடவுள் நல்லது செய்ய வேண்டும் என்ற சுய எண்ணத்தில்தான் வழிபடுகின்றனர்.

இதை படிக்கும் தங்களுக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால்…
- எழுதியது
ஆவி.குமார்.